Friday, 19 March 2021

கருவளர்ச்சேரி தல சிறப்பு பாமாலை

 

 

விநாயகர் துதி

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.

 

 

 

அகிலாண்டேஸ்வரி அம்பாள்பாமாலை

 

 

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

 

அகத்தீஸ்வரர் மகிழ்அகிலாண்டேஸ்வரி

அருட்பா பாட அருள்புரிவாய்

ஜெகத்தீஸ்வரிசுத! சித்திவி நாயக

 செந்திற்குமரன்நற்றமைய!

சுகத்தைத்தருசிவ பெருமாள்தநய!

துதித்தா ரிப்பதி னாறினையும்

இகத்தே பெற நல மெல்லாம்ஈந்தருள்

ஏத்துவன்நின்மலர்த்தாளிணையே!

 

 

1. தடுத்தாட்கொள்ளும்தந்தையாய்

நம்பன்அகத்திய நாதன்நற்றாள்

      நாடொறு(ம்‌) நாம்பணிந்தேத்திடவே

உம்பர்புகழத்தீஸ்வரர்போற்றும்

      உமையகி லாண்ட நாயகியே

தம்பொன்மொழிகொளத்தாயின்தண்ணார்

      தகவொடு தடுத்தாட்கொண்டிடவே

செம்பொன்கொழித்திடு திருவூர்கருவளர்

      சேரியி லேதிகழ்கின்றவளே!

  

2. வரம்பெற வாரும்அன்பர்களே

நிவைசேர்கருவளர்சேரியின்தந்தையை

         நித்தலும்பாடி வணங்கிடவே

தலைசேர்கைகுவித்தும்பர்கள்நாடொறும்

       தாம்தொழு கின்ற தகவுடையாய்

அலைசேர்திருமகள்அறிஞர்க்கொருமகள்

        அன்பொடு பணியும்திருவுடையாய்

மலைசேர்தவமகள்மாண்பொ டெழுந்தனை

        மானிடர்வந்து வரம்பெறவே!

 

3. நான்கெல்லை நவிலுதல்

தெருள் சேர்ஞானசம்பந்தர்பாடிய

      திருக்கருக்குடியின்கிழக்கினிலே

அருள்சேர்‌ ‌ திருஅரி சிற்கரை புத்தூர்

      அதற்கு மேற்குத்திசையினிலே

இருள்தீர்கிருஷ்ணா புரந்தெற்கினிலே

       எயின னூர்க்கு வடமேற்கே

பொருள்சேர்கருவளர்சேரி புகுந்தாய்

       பொன்அகி லாண்டேஸ்வரிதாயே.

 

4. ஸ்ரீசக்கரத்தெய்வநாயகி

ஸ்ரீசக்கரத்தினி லேவீற்றிருக்கும்

         திருஅகி லாண்ட நாயகியே

ஸ்ரீசக்கரமாம்வேதா கமத்தின்

         சிறந்த கருத்தாய்த்திகழ்பவளே

ஸ்ரீசக்கரமென அன்பரின்தூய

         திருவுளங்கொண்ட நற்றாயே

ஸ்ரீசக்சரத்துக்கருவளர்சேரித்

         தெய்வக்கோவில்தேர்ந்தளே! 


5 ஸ்ரீசக்கர மேரு வீற்றிருப்பாள்

சித்தியளிக்கும்கருவளர்சேரி

      ஸ்ரீசக்கரமே ருடையவளே

சக்தி எனும்பல தெய்வமதாகிச்

      சமயங்கடந்த மெய்ப்பொருளே

பக்தி செயும்மணி தர்க்கே தோன்றிப்

      பாங்குடன்அருளும்பரசிவையே

மூத்தி தருமகத்தீஸ்வரர்நீங்கா

      மூர்த்தி அகிலாண்டேஸ்வரியே!

 

6.தைலாபிஷேகச் சிறப்புடையாள்

திருவுரு சுனையாய்த்தைலந்தேர்ந்த

       சீரகத்தீஸ்வரர்நற்றேவி

குருவுரு வாயகத்தியருக்கருளிய

       குழகர்காவிரி நீராடி

ஒருவுரு வாம்சிவ மாக அமர்ந்தார்

       உத்தமர்போற்றும்ஊராகிப்

பெருவுரு கருவளர்சேரி எனும்பேர்

       பெற்றது நற்றவர்நாவாலே.

 

7. பல சுவை நைவேத்தியம் பாங்குடையாள்

அண்டகோடி அனைத்தை ஈன்ற

         அகிலாண்டத்தின்அன்னை நீ

கண்ட தெய்வம்எல்லாம்நீயே

        கருணா கரியாம்அன்னை நீ

உண்ட பொங்கல்உருசி மிகுந்து

         உள்ளம்உவந்த அன்னை நீ

கொண்ட பாயசம்வடையும்உண்டு

        குளிர்ந்து மகிழ்ந்த அன்னை நீ

 

8.பதினாறு பேறும் பக்தர்க்கருள்வாள்

மகத்துவ மிக்க அகத்தியர்போற்றி

        மாவரம்பெற்ற அருள்நலத்தால்

அகத்தீஸ்வரரென அழைக்கப்பெற்றார்

      அகிலாண்டேஸ்வரி அவரருளால்

செகத்தினி தேபதினாறு பேறும்

      சேவிப்பருவக்கருள்பவளே

முகத்து மகத்தும்மலர்ந்தருள்வழங்கும்

      மூர்த்தி யாய்வீற்றிருப்பவளே.

 

(ஆறு சீ ர்க்கழி நெடில்ஆசிரிய விருத்தம்)

9. ஆடை அணி அலங்கார அன்னை

எங்கும்மின்னும்பொன்னாடை

       இனிதே யணிந்து ஜொலிப்பாய்நீ

தங்க நகைமணி தாமணிந்தே

       தகதக தகவென ஜொலிப்பாய்நீ

துங்கக்கவசம்தனையணிந்தே

        துலக்க முடனே ஜொலிப்பாய்நீ

பொங்கும்முகமலர்பூத்தினிதே

        புனித உளத்துடன்ஜொலிப்பாய்நீ

 

10. பிணக்கை நீக்கி கணக்காய் தருவாள்

பிணக்கைத்தீர்த்தே இணக்கிடுவாய்

          பிணிகள்தீர்த்தே காத்திடுவாய்

கணக்காய்நல்லவை தந்திடுவாய்

         கருணை ஊட்டும்தாயாவாய்

உனக்கார்சொல்வர்என்தேவை

         உணர்ந்தே நல்கும்தாயாவாய்

எனக்கார்துணைசொல்அகிலாண்டம்

        என்றும்எந்தன்தாய்நீயே.

 

11. நலந்தரும்நல்லதாய்தந்தை

அன்புத்தாய்நீ அகிலாண்டம்

        அறிவுத்தந்தை அகத்தீசர்

இன்புற்றிருக்க வழி செய்வீர்

        எழிலார்தெய்வ நலம்பெறவே

தென்புற்றிரிக்கும்சு௧ம்பெறவே

       தெய்வச்சாந்தி தனையருள்வீர்

துன்புற்றார்துயர்தீர்த்திடவே

        துணை செய்திடுவீர்மகிழ்ந்திடவே.

 

12. எல்லாம்வல்ல தாய்தந்தை

சொல்லும்பொருளும்நீங்காத

        தொடர்பு கொண்ட தன்மையதாய்

அல்லும்பகலும்நீங்காத

        அன்பே கொண்டீர்அருளாலே

வெல்லும்வழிகள்செய்திடுவீர்

       வெற்றியளிப்பீர்விரைவினிலே

செல்லும்வழித்துணை ஆவீர்கள்

      எல்லாம்வல்ல பெற்றோரே.

 

13. தேவை அருளும் தெய்வத்தாய்

சேவை உனக்குச்செய்திடிலோ

தேவை அனைத்தும்தந்திடுவாய்

பூவை உனக்குச்சார்த்திடிலோ

புனித உள்ளம்ஈந்திடுவாய்

நாவை அடக்கிப்பேசிடிலோ

நயங்கள்யாவும்தந்திடுவாய்

தேவை எனக்காம்அகிலாண்ட

தேவீ உந்தன்அருள்ஒன்றே.

 

14. திரிகரண பூஜை செய்க

வாடா மலராம்இதயத்தால்

மகிழ்தே உன்னை அர்ச்சிப்பேன்

கோடா வாக்கால்உன்நாமம்

குழைந்து சொல்லித்துதித்திடுவேன்

எடாச்சான்றோர்கருத்தினையே

எண்ணி எண்ணிப்போற்றிடுவேன்

ஒடா உள்ளத்தொருமையினால்

உவந்து மகிழ்ந்தே உயர்ந்திடுவேன்‌!

 

15. குற்றம்நீக்கிக்குணம்தருவாள்

ஏமமாகும்உன்னரூளை

இனிதே பற்றத்துணைபுரிவாய்

காம வெகுளி மயக்கத்தைக்

கடிதே நீக்க அருள்புரிவாய்

நாம ரூபம்தனைத்தாண்டி

நண்ணும்பேறும்நல்கிடுவாய்

சேம வாழ்வு ஈந்திடுவாய்

ஸ்ரீஅகிலாண்ட நாயகியே!

 

16. ஆச்சார்யாள்புகழ்அன்னை

அம்மா உன்னை ஆச்சார்யாள்

அணுகிக்கண்டார்மகிழ்ந்திட்டார்

அம்மா இனிதே உன்னருளை

அருளுகி றாய்எனப்புகழ்ந்திட்டார்

உம்மா சும்மா உனைத்துதித்தே

சுகத்தோடிருக்க அருள்தருவாய்

தம்மா இதனிற்பெரிதுண்டோ

அகிலாண்டேஸ்வரி அருட்தாயே!

 

மருதாநல்லூர்  ஓய்வு பெற்ற தலைமைஆசிரியரான திரு. கு.நடராஜப்பிள்ளை, ஒருநாள்அகிலாண்டேஸ்வரியின் சன்னிதானம்வந்த போது, தேவியின்அருளால்இந்த 16 அருட்பாடல்களைப்பாடினார்‌. இந்த அருட்பாடல்களை  பாராயணம்செய்து ஸ்ரீஅகிலாண்டேஸ்வரியை பூஜை செய்பவர்கள்எல்லா நலமும்‌, வளமும்பெற்று, அன்பும்‌, அருளும்‌, அறமும்அமையப்பெற்று நீடு இன்பமும்‌, புகழும்எய்தி வாழ்வார்கள்‌.

 

இங்ஙனம்

அகிலாண்டேஸ்வரியின்  அன்பர்கள்‌.

5.வேம்பு குருக்கள்

பூஜை ஸ்தாணீகம்‌, ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி கோயில்

கருவளர்ச்சேரி, மருதாநல்லூர் - 612 402.

கும்பகோணம்வட்டம்‌.

 

தலச்சிறப்பு  

கருவளர்ச்சேரி  - கரு உருவாக

திருக்கருகாவூர் - கருவை பாதுகாத்து சுகப்பிரசவம்

 

கருவளர்ச்சேரி




திருக்கருகாவூர்





அமைவிடம்

கும்பகோணத்தின் தெற்கில் திருவாரூர் சாலையில் 6 கி.மீ தூரத்தில் மருதாநல்லூர் உள்ளது, இந்த இடத்தில் இருந்து கிழக்கு நோக்கிய சாலை நாச்சியார்கோயில் செல்கிறது. இந்தச் சாலையில் இரண்டு கி.மீ தூரத்தில் உள்ளது கருவளர்ச்சி தரும் கருவளர்ச்சேரி.

 

திருக்கருக்குடி  - மருதாநல்லூர் அருகே உள்ள பாடல் பெற்ற சிவத்தலம் . இத்தலம் கடந்துதான் கருவளர்ச்சேரி அடையவேண்டும்.

 

https://www.google.com/maps/dir/Kumbakonam,+Tamil+Nadu/Sri+Akilandeswari+Ambal+sametha+Sri+Agastheeswarar+Temple/@10.9240805,79.4016064,17z/data=!4m14!4m13!1m5!1m1!1s0x3a5532b360353419:0x9ecb5d94413ad35!2m2!1d79.3844976!2d10.9601852!1m5!1m1!1s0x3a553304ee6f0fb5:0xd35762242792a443!2m2!1d79.4161799!2d10.9244939!3e0

 

 

கருவளர்ச்சேரி - பெயர்க்காரணம்: 

இத்திருக்கோயிலில்ப்ரதான தெய்வமாக விளங்கும்ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பாள்ஸ்வயம்புவாகப்புற்று மணலால்தானாகவே உருவானதாக வரலாறு. இங்கே அம்பாள்ஸ்வயம்புவாக உருவாகி வளர்ந்தது போலவே இவ்வாலயத்தில்குழந்தை வரம்வேண்டி ஐதீகம்‌, அதனாலேயே இவ்வூருக்கு கருவளர்ச்சேரி என்றும்‌, அம்பாளுக்கு கருவளர்நாயகி என்றும்வபயர்ஏற்பட்டது. மேலும்‌, ஸ்ரீ அகஸ்திய முனிவர்அவரது துணைவி லோபாமுத்ராவுடன்தம்பதியாக பூஜை செய்த காரணத்தினால்ஸ்வாமிக்கு ஸ்ரீ அகஸ்தீஸ்வரர்என்றும்‌, அம்மனுக்கு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி என்றும்பெயர்வழங்கப்படுகிறது.

 

கருவளர்ச்சேரி - குழந்தை பிரார்த்தனை ஸ்தலம்‌:

திருமணமான தம்பதிகள்தங்களுடைய வம்ச விருத்திக்காகக்குழந்தை பாக்கியம்வேண்டிப்பிரார்த்தனை செய்து கொள்ளும்மிக முக்கியமான குழந்தை பிரார்த்தனை ஸ்தலமாக கருவளர்ச்சேரி விளங்குகிறது.

இவ்வாலயத்தில்கருவளர்நாயகி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி ஸ்வயம்புவாக உருவாகியதைப்போலவே இங்கே வந்து பிரார்த்தனை செய்து கொள்ளும்பெண்களுக்குக்கரு உருவாகி வளர்வதாக ஐதீகம்‌. எனவே, இவ்வாலயத்தின்முக்கிய பிரார்த்தனையாக குழந்தை வேண்டி பிரார்த்தனை செய்யப்படுகிறது.

 

 குழந்தை பிரார்த்தனை மூறை :

 கணவன்மனைவி இருவரும்தம்பதியாக ஆலயத்திற்கு வந்து பிரார்த்தனை செய்ய வேண்டும்‌.

 

பிரார்த்தனை செய்வதற்குக்கீழ்கண்ட பூஜை பொருட்கள் அவசியம்‌.

1. உருண்டை மஞ்சள்கள்‌ - ஏழு

2. பசு நெய்

3. எலுமிச்சம்பழங்கள்‌ - இரண்டு

4. தேங்காய்

5. வாழைப்பழம்‌.

6. வெற்றிலை பாக்கு

7. புஷ்பம்

8. குங்குமம்

9. ஊதுபத்தி

 

பிரார்த்தனை செய்யும்தம்பதிகள்அம்மன்சன்னதியில்மனதார அம்மனை வேண்டுதல்வேண்டும்‌. குழந்தை வரம்வேண்டும்பெண்மணிஅம்மன்சன்னதியின்வாயிற்படியை நெய்யினால்மெழுகி கோலமிட்டு மஞ்சள்குங்குமத்திலகமிட்டு (பாத பூஜை செய்வது போல) பிரார்த்தனை செய்தல்வேண்டும்‌.

 

பின்னர்அம்மனுக்கு அர்ச்சனை செய்து ஏழு மஞ்சள்மற்றும்ஒரு எலுமிச்சம்பழம்பிரசாதமாக வழங்கப்படும்‌. அப்பிரசாதத்தைப்பெற்றுக்காண்டு கீழ்க்கண்டவாறு வேண்டிக்கொள்ள வேண்டும்‌.

 

அம்மனின்அனுக்ரஹத்துடன்கர்ப்பம்தரித்து, பின்னர்வளைகாப்பு, சீமந்தம்செய்யும்பொழுது முதல்ஏழு வளையல்களை அம்பாளுக்குச்சமர்ப்பணம்செய்வதற்காக எடுத்து வைத்து விடுகிறேன்என்றும்‌,

 

 பின்னர்குழந்தை பிறந்து கோவிலுக்கு வரும்போது குழந்தையை அம்மன்சன்னதியில்உள்ள தொட்டிலில்இட்டு அர்ச்சனை செய்து அந்த வளையல்களைச்சமர்ப்பிக்கிறேன்என்றும்மனதார வேண்டிக்கொள்ள வேண்டும்‌.

 

மஞ்சள்மற்றும்எனுமிச்சம்பழப்பிரசாதம்

 பிரசாதமாக வழங்கப்பட்ட எலுமிச்சம்பழத்தைத்தம்பதிகள்தங்களது இருப்பிடம்சென்றவுடன்சாறு பிழிந்து (ஜூஸ் செய்து) சர்க்கரை அல்லது உப்பு கலந்து அந்த தம்பதிகள்மட்டும்பருக வேண்டும்‌.

 

மேலும்‌, அந்த ஏழு மஞ்சள்களை பிரார்த்தனை செய்து அப்பெண்மணியைத்தவிர வேறு யாரும்தொடுதல்கூடாது. அப்பெண்மணிபெண் மட்டும்தினமும்குளிக்கும்போது உடலில்பூசிக்குளிக்க வேண்டும்‌. அவரவர்உபயோகத்துக்கேற்ப ஒரு மஞ்சள்முடிந்தபின்அடுத்த மஞ்சளை எடுத்து உபயோகப்படுத்த வேண்டும்‌. பாதத்தில்படாமல்உடலில்வேறு எங்கு வேண்டுமானாலும்பூசிக்குளிக்கலாம்‌.

 

அம்பாளின்அனுக்ரஹத்தினால்அரை மஞ்சளிலிருந்து மூன்று மஞ்சள்தீர்வதற்குள்ளாகவே அப்பெண்மணி கருத்தரித்துவிடுவார்‌. இருப்பினும்குழந்தை பிறக்கும்வரை தொடர்ந்து மஞ்சளை உபயோகப்படுத்தி வர வேண்டும்‌. பின்னர்கரு நன்கு வளர்ந்து வளையலணி விழா சீமந்தம் செய்யும்போது முன்செய்த பிரார்ததனையின்படி முதலில்ஏழு வளையல்களை அம்பாளை நினைத்து அம்பாளுக்காக வீட்டில்பத்திரமாக எடுத்து வைத்து விட வேண்டும்‌. பின்னர்மீதியுள்ள வளையல்களை அப்பெண்மணிக்கு அணிவிக்க வேண்டும்.

 

அம்பாளின்கிருபையுடன்குழந்தை நல்லபடியாகப்பிறந்து ஒரு வயது அல்லது இரண்டு வயதுக்குள்குழந்தையை ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி ஆலயத்திற்கு அழைத்து வந்து சன்னதியில்உள்ள தொட்டிலில்குழந்தையை இட்டு, எடுத்து வைத்த வளையல்களையும்சமர்ப்பித்து அர்ச்சனை செய்து பிரார்த்தனையை நிறைவேற்ற வேண்டும்‌. இதுவே குழந்தை பிரார்த்தனை செய்யும்முறையாகும்‌.

 

விவாஹ பிரார்த்தனை

ஸ்ரீஅகஸ்திய மகரிஷிக்கு பரமேஸ்வரர்திருக்கல்யாண காட்சி அருளிய ஸ்தலமாக விளங்குவதால்இத்திருக்கோவிலில்திருமணப்பிரார்த்தனை செய்வது விசேஷம்ஆகும்‌. திருமணம்ஆகாத பெண்கள்‌, ஆண்கள்ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி அம்மனுக்கு 7 வாரங்கள்தொடர்ந்து (எதேனும்ஒரு கிழமையில்‌) அர்ச்சனை செய்து வர, கூடிய விரைவில்திருமண வாழ்க்கை கை கூடும்‌. மேலும்‌, பிரார்த்தனை நிறைவேறியவுடன்அம்மனுக்குப்பூமாலை மற்றும்திருமாங்கல்யம்சாற்றி பிரார்த்தனையை நிறைவேற்ற வேண்டும்‌. இதுவே திருமண பிரார்த்தனைமுறையாகும்‌.