Wednesday, 12 October 2016

குழந்தை பேறு மகப்பேறு குழந்தை செல்வம் வாய்க்க

திருச்சி மலைக்கோட்டை குளக்கரையில் நந்தி கோவில் தெருவில் உள்ள நந்தியம்பெருமான்


குழந்தை பேறு  மகப்பேறு குழந்தை செல்வம்  வாய்க்க


தாயுமான வெண்ணையாகி தையை கூர்ந்து உருகி
மாயமான் மழுவும் ஏந்தி மயிர் கூச்செரிந்து
ஏழை என் உடல் வலி தெரிந்திடாமல்
பிழை பொறுத்து மகவு ஈந்திட அருள்வாயே .

நன்றி :அகஸ்திய விஜயம்


 

Sunday, 2 October 2016

எட்டு நாண்மலர்

எட்டு நாண்மலரை அட்டபுட்பம் என்பர் வடமொழியாளர். புன்னை, வெள்ளெருக்கு சண்பகம், நந்தியாவர்த்தம், பாதிரி, குவளை, அலரி, செந்தாமரை என்பன அவ் எண் மலர்களாம்.
 
அகப்பூசைக்குரிய எண்மலர்களாவன. கொல்லாமை, அருள், பொறியடக்கல், பொறை, தவம், வாய்மை, அன்பு, அறிவு என்பனவாம்.
இதனை நலஞ்சிறந்தார் மனத்தகத்து மலர்கள் எட்டும் என்பார் அப்பர்.
எட்டு நாண்மலர் கொண்டவன் சேவடி
மட்ட லரிடு வார்வினை மாயுமால்
கட்டித் தேன்கலந் தன்ன கெடிலவீ
ரட்ட னார்அடி சேரும் அவருக்கே -தி.5 .54 பா.1
என்னும் இத்திருப்பதிகம் திருவதிகை வீரட்டானத்திறைவரைப் பற்றியது. இப்பதிகத்துப் பல பாடல்களிலும் அஷ்டபுஷ்பம் சார்த்தலையும் அதன் பலன்களையும் குறிப்பிடுகின்றார்.