Saturday, 7 April 2018

திருமூலர் திருமந்திரத்தில் நடராஜர் தரிசன பாடல்கள்

திருமூலர் திருமந்திரத்தில் நடராஜர் தரிசன பாடல்கள்




ஒன்பதாம் தந்திரம் - 10. திருக்கூத்து
ஒன்பதாம் தந்திரம் - 11. சிவானந்தக் கூத்து
ஒன்பதாம் தந்திரம் - 12. சுந்தரக் கூத்து
ஒன்பதாம் தந்திரம் - 13. பொற்பதிக் கூத்து
ஒன்பதாம் தந்திரம் - 14. பொற்றில்லைக் கூத்து
ஒன்பதாம் தந்திரம் - 15. அற்புதக் கூத்து


https://shaivam.org/thirumurai/tenth-thirumurai/554/thirumoolar-nayanar-thirumandiram-tantiram-9-thirukothu-dharisanam
https://shaivam.org/thirumurai/tenth-thirumurai/1352/thirumoolar-nayanar-thirumandiram-tantiram-9-sivananda-kootthu
https://shaivam.org/thirumurai/tenth-thirumurai/1353/thirumoolar-nayanar-thirumandiram-tantiram-9-sundara-kootthu
https://shaivam.org/thirumurai/tenth-thirumurai/1354/thirumoolar-nayanar-thirumandiram-tantiram-9-porpathik-kootthu
https://shaivam.org/thirumurai/tenth-thirumurai/1355/thirumoolar-nayanar-thirumandiram-tantiram-9-potrillaik-kootthu
https://shaivam.org/thirumurai/tenth-thirumurai/1356/thirumoolar-nayanar-thirumandiram-tantiram-9-arputhak-kootthu

ஆரந்தம்

யோகாந்தம்  -யோக அனுபவத்தில் ஒளி கிடைக்கும் .
காலாந்தம்  - பசு காரணங்கள் எல்லாம் பத்தி காரணங்கள் ஆகிவிடும்.
நாதாந்தம் -பிரணவ தேகம்
போகாந்தம் -ஞான தேகம்

பிண்ட அளவில் இறையோடு கலந்து நிற்றல் வேதாந்தம்.
அண்ட அளவில் இறையோடு கலந்து நிற்றல் சித்தாந்தம்.
 
 




  • கலாந்த நிலையிலிருந்து மெல்ல மெல்ல மேலேற நாத தத்துவத்தின் விளிம்பில் சூக்குட வாக்கில் ஆன்மாவிற்குப் பிரணவ தேகம் அமையும். இது நாதாந்த அனுபவம்.
  • அதற்கும் மேலே போனால் மாயை என்கிற மலம் நீங்கும்.
  • அதற்கு மேல் செய்ய நமக்கென்று இல்லை எல்லாம் இறைவன் செயல் என்று இறைபணியில் ஒடுங்கும் நிலை. அங்கே கன்ம மலம் ஒழியும்.
  • பின்னால் தன்முனைப்பு ஒழிய வேண்டும்.
  • சீவபோதம் சிவபோதத்தில் ஒடுங்க ஆணவமலம் நீங்கிட போதாந்த அனுபவம் வரும்.
  • அதற்கும் மேலே செல்லும் போது அருள்வீழ்ச்சி ஏற்பட்டு ஆன்மா அருளில் திளைத்து ஞானதேகம் பெறும்.
  • ஞானதேகம் பெற்றபின் இஅறையொளி பிண்டத்துள் நடுநாடியுள் நிறைய அதனுடன் ஆன்ம ஒளி கலக்க வருவது வேதாந்த அனுபவம்.
  • இங்கே ஒளி மயத்திரே காணுகிற நூல் போன்ற ஒளியையே பூணுல் என்கிறோம். இந்த ஒளிநூல் பிரமரந்திரம் வழியாக பிண்டத்திலிருந்து மேலேறி அண்டத்தில் உள்ள இறையொளியோடு கலந்து நிற்க வருவது சித்தாந்த அனுபவம்-இதுவே சித்தாந்த முத்தி.

தச காரியம்


எந்த ரூபத்தோடு தொடர்பு கொள்கிறோமோ அதன் ரூபமாகவே ஆகிவிடுதல்.
அதில் திளைத்தபிறகு அது என்ன என்று தெரிந்து விடும்.
தெரிந்தபின் இது இவ்வளவு தானா என்று அதை நீங்கி மேலே போதல்.
இதனை உண்மை நெறி விளக்கம் ரூபம், தரிசனம், சுத்தி என்று கூறுகின்றது.
இதையே தமிழில் உருவம், காட்சி , நீங்கல் என்பர்.

தத்துவ ரூபம்.
தத்துவ தரிசனம்,
தத்துவ சுத்தி;


ஆன்ம ரூபம்.
ஆன்ம தரிசனம்,
ஆன்ம சுத்தி;


சிவ ரூபம்.
சிவ தரிசனம்,
சிவ யோகம்,


சிவ போகம்.

சிவபோகத்தோடு முடிந்துவிடும்.
அதற்குமேல் நிலை கிடையாது. சிவத்தோடு இருந்து ஆனந்தம் அனுபவிக்க வேண்டியது தான் .

Friday, 6 April 2018

திருமூலர் அருளிய திருமந்திரத்தில் சூரிய வழிபாட்டு பாடல்கள்



திருமூலர் அருளிய திருமந்திரத்தில் சூரிய வழிபாட்டு பாடல்கள்



ஏழாம் தந்திரம் - 22. ஆதித்த நிலை - அண்டாதித்தன்
ஏழாம் தந்திரம் - 23. பிண்டாதித்தன்
ஏழாம் தந்திரம் - 24. மனவாதித்தன்
ஏழாம் தந்திரம் - 25. ஞானாதித்தன் 
ஏழாம் தந்திரம் - 26. சிவாதித்தன்





தை பொங்கல், மாத பிறப்பு, வருட பிறப்பு காலங்களில் மேற்காண் திருமந்திர பாடல்களை ஓதுவது சிறப்பு.


https://shaivam.org/thirumurai/tenth-thirumurai/484/thirumoolar-nayanar-thirumandiram-tantiram-7-athitha-nilai
https://shaivam.org/thirumurai/tenth-thirumurai/485/thirumoolar-nayanar-thirumandiram-tantiram-7-pindadittan
https://shaivam.org/thirumurai/tenth-thirumurai/486/thirumoolar-nayanar-thirumandiram-tantiram-7-munadhithan
https://shaivam.org/thirumurai/tenth-thirumurai/487/thirumoolar-nayanar-thirumandiram-tantiram-7-gnanadhittan
https://shaivam.org/thirumurai/tenth-thirumurai/488/thirumoolar-nayanar-thirumandiram-tantiram-7-sivadhithan

பரனை நினைந்து



பரனை நினைந்து பணி செய்க:

அறம்  பொருள்  இன்பம் வீடு என்பன  பற்றி  ஔவைப் பிராட்டியார் ஒரு  வெண்பாவில்  விளக்கியுள்ளமை  அறிந்து  இன்புறத் தக்கது.

ஈதல் அறம் தீவினைவிட்டு  ஈட்டல்பொருள்  எஞ்ஞான்றும்
காதல் இருவர் கருத்து  ஒருமித்து -  ஆதரவு
பட்டதே இன்பம் பரனை  நினைந்து  இம்மூன்றும்
விட்டதே பேரின்ப வீடு.

-ஔவையார், தனிப்பாடல்  திரட்டு  பா. 64

நல்லோருக்கும்  நற்செயலுக்கும்  கொடுத்தலே  அறமாகும். 
தீவினைவிட்டு  நல்வழியில்  ஈட்டுதலே  பொருளாகும். 
எக்காலத்தும்  காதலர்  இருவர் கருத்து ஒருமித்து  ஆதரவு  பட்டதே இன்பமாகும்.
பரனை  நினைந்து  அவனருளால்  இம்மூன்றையும்  விட்டதே  பேரின்ப வீடாகும்.

வீடு  என்றால்  விடுபடுதல். விடுதலையை மட்டும்  ஔவையார்  சொல்லவில்லை.  இவ்வுலகைவிட்டால் உயிர் பெறுவது  பேரின்ப  வீடாகும் என்கிறார். இதனால்தான்  வீட்டை,  வீடுபேறு எனக் குறித்தனர்  அறவோர். 
வீடு - துன்ப நீக்கம்.  பேறு -  இன்ப ஆக்கம் என்கிறது  சித்தாந்த  சைவம்.

இப்பாடலில்  பரனை  நினைந்து என்பதே முக்கியமானது. 
அவனன்றி  அவனியில் ஒன்றும் அசையாதல்லவா? 
எனவே பரனை நினைந்து  ஈதலே அறம் எனப்படும். 
பரனை  நினைந்தாலே தீவினைவிட்டு நல்வினைப்பட்டுப்  பொருளீட்டும்  செயல்  நிகழும்.
பரனை நினைந்தாலே  இன்பமும்  எக்காலத்தும்  காதலர்  இருவர் கருத்து ஒருமித்து  ஆதரவுடன்  நிகழும். 
பரனை  நினைந்தாலே இம்மூன்றையும் விட்டு  வீடுபேறடையவும்  இயலும்