- கோமதி அம்மை பிள்ளைத் தமிழ் - புளியங்குடிப் பிள்ளை
கேடாவரும்
நமனைக்கிட் டவரா தேதூரப்போடாயென் றோட்டியுன்றன்
பொற்கமலத் தாள்நிழற்கீழ்வாடாவென அழைத்துவாழ் வித்தாலம் மாயுனைக்கூடாதென் றார்தடுப்பார் கோமதித்தாய் ஈஸ்வரியே.
- கோமதி மகிமை என்ற தலைப்பிலான மகாகவி பாரதியாரின் பாடல்கள் சங்கரன்கோவிலின் மகிமையைக் கூறுகின்றன.
- தமிழ் இலக்கிய உலகின் முடிசூடா மன்னன் உ.வே. சாமிநாத ஐயருக்கு பிரியமானது இத்தலம்.
- மக்களின் உடற்பிணி, மனப்பிணி போன்றவற்றை நீக்கும்பொருட்டு கோமதி அன்னையின் திருச்சந்நிதி முன்பு ஸ்ரீ வேலப்பதேசிக சுவாமிகளால் ஸ்ரீசக்கரபீடம் அமைக்கப்பட்டுள்ளது.
- சீவலமாறபாண்டியன், முத்துவீரக்கவிராயர் இயற்றிய சங்கரநயினார் கோவில் தலபுராணம் மற்றும் சங்கர சதாசிவமாலை,சங்கர நயினார் கோவில் அந்தாதி, சங்கரலிங்க உலா போன்ற நூல்கள் யாவும் சங்கரன்கோவில் நகரின் மாண்பை விளக்கும்.
- புளியங்குடி முத்துவீரக் கவிராயரின் கோமதியம்பிகை பிள்ளைத்தமிழ்,
- சென்னிகுளம் அண்ணாமலைக் கவிராயரின் கோமதி அந்தாதி,
- பொ. சுப்பிரமணிய பிள்ளை இயற்றிய கோமதியம்பிகை பேரில் சந்தவிருத்தம், பதிகம்,
- கள்ளிக்குளம் சு. சுப்பையா ஆக்கிய கோமதி அந்தாதி, கோமதி மும்மணிமாலை, கோமதி வாரதுதி, கோமதி திருவெழுக்கூற்றிருக்கை மற்றும்
- பாரதியாரின் பாடல்கள்
- உள்ளிட்ட பலவும் கோமதியம்பிகையின் அருட்கருணையை விவரிக்கும் அற்புத நூல்களாகும்.
இத்தலத்தில்
சென்ற நூற்றாண்டில் சிறந்த சைவசித்தாந்தவாதியாக வாழ்ந்தவர் பேட்டை ஆ. ஈஸ்வரமூர்த்திப் பிள்ளையாவார்.
இவர் இயற்றிய கோமதி சதரத்னமாலை என்னும் நூல் என்றும் வாடாமாலையாக
அன்னையின் திருவடியில் மிளிர்கின்றது.
திருநெல்வேலி
தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்
கழகம்'
திருநெல்வேலி
( சங்கரன் கோவில் ) சைவ சித்தாந்த சபை
No comments:
Post a Comment